மூடநம்பிக்கைக்கு அளவே இல்லையா? செல்லப் பிராணிக்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்

1 Min Read

வீட்டில் வளர்க்கும் நாய்க்கு, குடும்பத்தினர் வளைகாப்பு நடத்திய சம்பவம் சமூக ஊடகத்தில் வைரலாகி உள்ளது.

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், வளர்ப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களாகவே மாறிவிடுகின்றன. சிலர் நாய்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடி கேக் வெட்டி மகிழ்கின்றனர். தற்போது ஒரு குடும்பம் அதையும் தாண்டி, நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.

குட்டிப் போடப் போகும் தங்கள் வீட்டு நாயைப் புத்தாடை, மாலை, ஆபரணங்கள் அணிவித்து அலங்கரித்து, நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் வளைகாப்பு சம்பிரதாயங்கள் (மூடச்சடங்கு) நடத்தப்பட்டன. நாய்க்கு அதன் முகத்தில் உரிமையாளர் மஞ்சள் பூசி சடங்கு செய்தார். அந்த நாயும் எதற்காக தேவையற்று இதையெல்லாம் செய்கின்றனர் என்பதை புரியாமல் உற்றுப் பார்த்தது. என்று தணியும் இந்த மூடத்தனம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *