தஞ்சை இரத்தினகிரி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்

1 Min Read

பகுத்தறிவாளர் கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருந்து சிறப்பாகப் பணியாற்றியவரும், திராவிட இயக்கச் சிந்தனையாளரும், கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் மேனாள் அகில இந்திய தலைவருமான கொள்கைத் தோழர் தஞ்சை இரா.இரத்தினகிரி அவர்கள் (வயது 85) இன்று (24.11.2025) மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.

அவர் பிரிவால் பெருந்துயரத்திற்கு ஆளாகியிருக்கும் அவரது வாழ்விணையர் திருமதி. நாடியம்மை, மகன் கார்க்கி, மகள் விடுதலைச் செல்வி ஆகியோருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில்  ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்புக்கு: 94435 87889

கி.வீரமணி

தலைவர்

 திராவிடர் கழகம்

சென்னை    

24.11.2025 

குறிப்பு: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசி மூலம் மறைந்த இரத்தினகிரியின் வாழ்விணையரிடமும், மகனிடமும் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *