கூட்டங்களுக்குக் குடையுடன் வருமாறு விளம்பரம் செய்யுங்கள்! கழகப் பொறுப்பாளர்களுக்குத் தலைமை நிலைய வேண்டுகோள்!

கழகத் தலைவர் ஆசிரியரின் சூறாவளி சுற்றுப் பயணத் திட்டம், நிகழ்ச்சிக்கு மிக அருமையான ஏற்பாடுகளைச் செய்து, அனைத்துத் தரப்பு கேட்பாளர்களையும் ஈர்க்கிறார்கள் நமது உழைப்புத் தேனீக்களான தோழர்கள்!

‘‘துறவிக்கும் மேலானவர்கள்’ எனது தொண்டர்கள் – தோழர்கள்” என்று நமது தொண்டற இலக்கணம்பற்றி மகிழ்ந்து பாராட்டினார் நமது அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார்.

மழை, கனமழை, இப்படிப் பல பருவம் தாண்டியும் கழகப் பிரச்சாரம் சிறப்புடன் நடைபெற வேண்டும். பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தடைப்படுமோ என்ற அச்சமோ, தயக்கமோ, நமது கொள்கைப் பிரச்சாரத்தைத் தடுத்துவிடக் கூடாது.

ஆகவே, மழை பெய்தாலும், ‘குடிசெய்வார்க் கில்லை பருவம்’ என்ற இலக்கணத்திற்கு, இலக்கியமாய்த் திகழும் நம் தோழர்கள், ‘‘கூட்டத்திற்குக் குடையோடு வாருங்கள்’’ என்று கட்டாயம், விளம்பரத்தில் வேண்டுகோள் விடுத்து, மழை பெய்தாலும் கூட்டம் – பிரச்சாரத்தை நிறுத்தாமல், தொடர சிறந்த வழிமுறையாகும்.

– தலைமை நிலையம்
திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *