உடல்நலம் விசாரிப்பு

1 Min Read

உடல்நலக் குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாராபுரம் மாவட்டத் தலைவர் கணியூர் கிருஷ்ணன் மகனும், கழக மாவட்ட இளைஞரணித் தலைவருமான இளந்தென்றல் உடல்நிலை குறித்து நேற்று (23/11/2023) தொலைப்பேசி வாயிலாக, தொடர்புகொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நலம் விசாரித்தார்.

– – – – –

உடல்நலக் குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டியன் அவர்களைத் தொலைப்பேசி வாயிலாக நேற்று தொடர்புகொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நலம் விசாரித்தார்.

– – – – –

உடல்நலக் குறைவு காரணமாகத் தனியார் மருத்துவ மனையில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டுள்ள சாவித்திரி சுப்பையன் (சாலைவேம்பு சுப்பையன் வாழ்விணையர்) அவர்களின் உடல்நலனை நேற்று (23.11.2025) தொலைப்பேசியில் தொடர்புகொண்டு தமிழர் தலைவர் நலம் விசாரித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *