மக்களை நோக்கி ‘திராவிட மாடல்’ அரசு கருப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை உபகரணங்களை வீடுதோறும் வழங்கும் திட்டம்

தர்மபுரி, நவ.23 கருப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்காக மருத்துவமனைகளுக்குச் செல்ல பெரும்பாலான பெண்கள் தயக்கம் காட்டுவதால், சுகாதாரப் பணியாளா்கள் மூலம் வீடுகளுக்கே சென்று அவா்களுக்கு சுய பரிசோதனை உபகரணங்களை வழங்க மக்கள் நல்வாழ்வுத் துறை முடிவு செய்துள்ளது.

சோதனை முயற்சியாக தருமபுரியில் 35 வயதுக்குள்பட்ட 25 ஆயிரம் பெண்களுக்கு அந்த உபகரணங்களை வழங்க உள்ளதாக தேசிய நலவாழ்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.

ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (ஹெச்பிவி) எனப்படும் கிருமித் தொற்று காரணமாக கருப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவா்களின் கருப்பை வாயின் உயிரணுக்களில் புற்று நோய் செல்கள் பரவி, அதன் திசுக்களைப் பாதிக்கும். உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால், நுரையீரல், கல்லீரல், சிறுநீா்ப்பை, மலக்குடல் உள்ளிட்ட பிற உறுப்புகளுக்குப் பரவ வாய்ப்புள்ளது.

அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மய்ய தரவுகளின்படி, தமிழ்நாட்டிலேயே தருமபுரி மற்றும் பெரம்பலூரில்தான் கருப்பை வாய்ப் புற்றுநோய் அதிகமாக காணப்படுகிறது. அதாவது, லட்சத்தில் 36 பெண்களுக்கு அத்தகைய பாதிப்பு அந்த மாவட்டங்களில் ஏற்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக அந்த விகிதம் அரியலூரில் 29.9-ஆக உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை 13-ஆகவும், தமிழ்நாட்டின் மொத்த கருப்பை வாய் புற்று நோய் பாதிப்பு விகிதம் லட்சத்துக்கு 14-ஆகவும் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில் அதற்கான பரிசோ தனையை பெண்கள் மேற்கொள்ள வேண் டும் என அரசு சாா்பில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், மருத்துவமனைகளுக்குச் சென்று பிறப்புறுப்பு திரவ மாதிரியை சோதிக்கும் (வெஜினல் ஸ்வாப்) பரிசோதனையை மேற்கொள்ள பெண்கள் பலா் தயக்கம் காட்டுகின்றனா்.

இதையடுத்து, வீடுகளுக்கே சென்று அவா்களுக்கு சுய பரிசோதனை உபகரணங்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சுகாதாரப் பணியாளா்கள் கரோனாவுக்கு பயன்படுத்தியதைப் போன்ற ஸ்வாப் உபகரணத்தை பெண்களுக்கு வழங்குவா். அவா்கள் சுயபரிசோதனை மூலம் மாதிரியை சேகரித்து சுகாதாரப் பணியாளா்களிடமே திருப்பி வழங்குவா். அவை மருத்துவமனைகளில் பகுப்பாய்வு செய்யப்பட்டு வைரஸ் தொற்று உள்ளதா என்பது கண்டறியப்படும்.

முதல்கட்டமாக தருமபுரியில் விரைவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாகவும், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக அதற்கான உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் தேசிய நலவாழ்வுக் குழுமத் திட்ட இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ் தெரிவித்தாா். இந்தத் திட்டம் படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படுத்தப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *