நீலமலை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.5 லட்சம்

நீலமலை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் முதல் தவணையாக மாவட்ட காப்பாளர் இரா.கவுதமன், மாவட்ட தலைவர் நாகேந்திரன் பொதுக்குழு உறுப்பினர் ராவணன் ஆகியோர் முதல் தவணையாக பெரியார் உலகத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கினர். உடன் மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் (பொள்ளாச்சி, 22.11.2025).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *