எல்லார்க்கும் உரியார்! அவர்தான் பெரியார்!

2 Min Read

பெரியார் ஒரு வரலாறு. அவர் தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு சகாப்தம். நல்லாரை காண்பதும் நன்றே என்று அவ்வையார் சொல்லியது பெரியாருக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது. அதுபோல புரட்சி கவிஞர் பாரதிதாசன் அவர்களும் தூய தாடி நெஞ்சில் விழும் என்று ஆரம்பித்து மண்டை சுரப்பி உலகம் தொழும், மனக்குகையில் சிறுத்தை எழும் என்று பெரியாரைப் பற்றி கவிதை முடித்திருப்பார். இப்படிப்பட்ட சிறப்புகள் வாய்ந்த பெரியார் கடவுள் எதிர்பாளர்  மட்டுமே என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14 மனிதர்கள் அனைவரும் சரிசமம் என்கிறது. ஆனால் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவன், உயர்த்தப்பட்டவன் என்கிற பிரிவு இருந்து வருகிறது. அதற்கு காரணம் ஜாதி வேறுபாடு என்றார்கள். அது மதத்தில் இருக்கிறது என்றார்கள். மதம் கடவுளிடம் இருக்கிறது என்றார்கள். அதனால் எல்லாவற்றிற்கும் மூல காரணமாக இருந்து வருகின்ற கடவுளை மற மனிதனை நினை என்றும், கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை, கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி என்று சமூக நீதிக்காக, மதவெறிக்கு எதிராக போராடியவர் தான் தந்தை பெரியார். அவர் கலகக்காரர்  அல்ல; அவர் புரட்சிக்காரர். சமூக நீதி போராட்டத்திற்கு நீங்கள் வரவேண்டும் என்றால் உங்களை முதலில் நீங்கள் இழந்து விட வேண்டும் என்று சொன்னவர் பெரியார். சுயமரியாதை ஒருவனுடைய உயிருக்கு சமமானது; மானமும் அறிவும் மனிதருக்கு அழகு, என்று பரப்புரையும் பிரச்சாரமும் செய்து வந்தவர் பெரியார். 1950–இல் கொண்டுவரப்பட்ட இந்து  திருமண சட்டத்தில் பிரிவு 7(a) அய் புகுத்தி ஆணும் பெண்ணும் மாலை மாற்றிக் கொண்டாலே அது திருமணம்தான்; அது சுயமரியாதை திருமணம் என்று புரட்சி செய்தவர் தந்தை பெரியார். நாட்டில் சமூக மாற்றத்தை பெருமளவில் ஏற்படுத்திய தந்தை பெரியாரின் பிறந்தநாளை முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செப்டம்பர் 17அய் சமூக நீதி நாள் என்று அறிவித்திருக்கிறது.. தமிழ்நாட்டில் 63 நாயன்மார்கள் இருந்தார்கள். அவர்கள் யாரும் ஜாதி வேறுபாடு பற்றி பேசவில்லை. 63 பேரும் தங்களுடைய தனி வழியில் சிவனை வழிபட்டார்கள். தந்தை பெரியார் 64ஆவது நாயன்மார். அவருடைய தனி வழியில் சமூக மாற்றத்திற்கு பாடுபட்டார். அவருடைய கொள்கைகள் என்றும் உயிருடன் வாழ வேண்டும். ஜாதி சமயமற்ற சம உரிமையுடன் மனிதர்கள் நாடு முழுவதும் இருந்திட வேண்டும் என்று காவி உடை தரித்த, சாமியார் தோற்றம் கொண்ட சிவ பக்தர் ஒருவர் புத்தக கண்காட்சியில் பெரியார் அரங்கத்திற்கு வந்திருந்து பேசியது ஆச்சரியம் மட்டுமல்ல; உண்மை. அவர் பேசிய கருத்துகள் முழுவதும் Periyar Vision OTT–இல் பதிவு செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. இன்றே காணுங்கள்.

எம். கல்பனா தேவி

அரிகேசநல்லூர்

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.

பெரியார் ஒடிடி செய்திகள் பெரியார் ஒடிடி செய்திகள்

சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!

உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!          இணைப்பு :  periyarvision.com

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *