தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் 5 நாட்கள் “மணவிழா நிழற்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி”

2 Min Read

சென்னை, நவ.22- தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 5 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் தர உள்ள மணவிழா நிழற்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி வரும் 01.12.2025 முதல் 05.12.2025ஆம் நாள் வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் மணவிழா நிழற்படம் (வீடியோ) எடுத்தல் என்றால் என்ன, நிழற்படம் எடுத்தல் பற்றிய வரலாறு, நிழற்படத்தின் அடிப்படைகள், ஒளியமைப்பு, கலவை மற்றும் மேம்பட்ட நிழற்பட நுட்பங்கள் கவனம் செலுத்தும் முறைகள், மணவிழா நிழற்படம் எடுத்தல் என்றால் என்ன, பாரம்பரிய நிழற்படம் எடுத்தல் மேம்பட்ட நுட்பங்கள், நேர்மையான நிழற்படம் எடுத்தல் மேம்பட்ட நுட்பங்கள், மணவிழா உருவப்படங்கள் மேம்பட்ட நுட்பங்கள், உங்கள் குழுவை உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல், உயர்நிலை நிழற்பட மறுசீரமைப்பு, ஆல்பம் வடிவமைப்பு, மணவிழா நிழற்படக் கலைஞர் மற்றும் திருமணமாக எப்படி சம்பாதிப்பது நிழற்பட வணிகம், திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ஆவது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம்.

இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். 8668102600 / 9943685468 .

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஅய்அய் அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.

முன்பதிவு அவசியம்: அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *