கோவைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு

தமிழ்நாடு, திராவிடர் கழகம் தமிழ்நாடு, திராவிடர் கழகம் தமிழ்நாடு, திராவிடர் கழகம்

தமிழ்நாடு, திராவிடர் கழகம் தமிழ்நாடு, திராவிடர் கழகம்

சென்னையில் இருந்து கோயமுத்தூருக்கு தொடர்வண்டியில் வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பிரபாகரன் தலைமையில் தோழர்கள் பயனாடை அணிவித்தும், புத்தகம் வழங்கியும் அன்போடு வரவேற்றனர். தங்கும் விடுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் கோவை சந்திரசேகரன் பயனாடை அணிவித்து வரவேற்றார். திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன், திமுக மாவட்ட அலுவலக பொறுப்பாளர் பூபாலன்,  காந்திபுரம் பகுதி செயலாளர் (தி.மு.க.) ஆர்.எம். சேதுராமன், சிவானந்தா காலனி பகுதி கழகப் பொறுப்பாளர் சிவராஜ் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தும் புத்தகங்கள் வழங்கியும் வரவேற்றனர். குறிச்சி பிரபாகரன்   தனது இல்ல மணவிழா அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (கோவை, 22.11.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *