இதுதான் குஜராத் மாடலோ!

1 Min Read

அகமதாபாத், மே 9- குஜராத் மாநிலத்தில், 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டு 7,105 பெண்களும், 2017ஆம் ஆண்டு 7,712 பெண்களும், 2018ஆம் ஆண்டு 9,246 பெண்களும், 2019ஆம் ஆண்டு 9,268 பெண்களும், 2020ஆம் ஆண்டு 8,290 பெண்களும் காணாமல் போய் உள்ளனர். 5 ஆண்டுகளில் மொத்தம் 41 ஆயிரத்து 621 பெண்கள் மாயமாகி உள்ளனர்.

இந்தத் தகவல்கள், என்.சி.ஆர்.பி. என்று சொல்லப்படக் கூடிய தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டவை ஆகும். அந்த மாநிலத்தில் 2019-2020 ஆண்டில் அகமதாபாத்திலும், வதோதராவிலும் 4,722 பெண்கள் காணாமல் போய் உள்ளதாக 2021ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மேனாள் அய்.பி.எஸ். அதிகாரியும், குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினருமான சுதிர் சின்கா கூறும்போது, “காணாமல் போன பெண்களைப் பொறுத்த மட்டில், சிறுமிகள் மற்றும் பெண்கள் என சிலர் எப்போதாவது குஜராத்தைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விபசாரத்தில் தள்ளப்படுவதையும் இதில் பல பெண்கள் பெரும் தொகைக்கு வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதையும் நான் கவனித்துள்ளேன்” என கூறி உள்ளார்

  இது எல்லாம் அந்த அரசுக்குத் தெரியாமலா நடந்திருக்கும். இது தொடர்பாக ‘குஜராத் ஸ்டோரி’ என்ற திரைப்படம் எடுக்க யாரும் முன்வருவார்களா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *