பப்பாளி இலைச்சாறு, மா இலைச்சாறால் தேர்தல் மை அழிக்கப்பட்டதா? நிகழ்வை விளக்கும் ஆஜ் தக் ஊடகவியலாளர்

2 Min Read

ஆஜ் தக் ஊடகவியலாளர் ஒருவர் கூறிய சிறிய சம்பவம் ஒன்று, அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடந்ததாக எதிர்க்கட்சிகளால் சமூக ஊடகங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், இந்த காட்சிப் பதிவைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டதில் இருந்து சர்ச்சை தொடங்கியது. அதில், பெயர் குறிப்பிடப்படாத ஒரு பா.ஜ.க. தொண்டருடன் பாட்னாவில் நடந்த உரையாடலை அந்தச் செய்தியாளர் சாதாரணமாக விவரிக்கிறார்.

‘இரண்டு முறை வாக்களித்தேன்’

அந்தத் தொண்டர், தான் ஒருமுறை நகரத்திலும், மீண்டும் தன் கிராமத்திலும் என இரண்டு முறை வாக்களித்ததாகக் கூறியுள்ளார். இதற்கு, அழியாத மை அடையாளத்தைப் பப்பாளி இலைச் சாற்றைக் கொண்டு அழித்ததாக அவர் கூறியுள்ளதாக அந்தச் செய்தியாளர் தெரிவித்தார்.

இப்போது எதிர்க்கட்சிகள் கூறிவருகின்ற தேர்தல் முறைகேட்டுக்கான சான்றுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் காட்சிப் பதிவு 4,38,000 பார்வைகளையும், ஆயிரக்கணக்கான எதிர்வினைகளையும் பெற்று வைரலாகியுள்ளது. ஷ்ரினேட், இதற்கு “பப்பீதே கா பத்தா = பீகார் மே வோட் சவுரி” (பப்பாளி இலை = பீகாரில் வாக்குத் திருட்டு) என்று தலைப்பிட்டிருந்தார்.

இந்தக் காட்சிப் பதிவில் நேரடியாக ஒப்புதல் வாக்குமூலமோ, அடையாளமோ, காட்சி ஆதாரமோ எதுவும் இல்லை; மாறாக, செய்தியாளரால் விவரிக்கப்பட்ட ஒருவரின் இரண்டாம் நிலைச் செய்திப் பதிவு மட்டுமே உள்ளது.

இருப்பினும், இதை இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஒரு முறையான மோசடியின் அறிகுறியாகச் சித்தரித்துள்ளனர். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி  அதிக இடங்களைப் பெற்று வெற்றிபெற, தேர்தல் நடைமுறைகளைத் திரித்துள்ளது என்று குற்றம் சாட்டுகின்றனர்.

பா.ஜ.க. செய்து வருகின்ற மோசடி

காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி. போன்ற எதிர்க்கட்சிகள், சிறப்புத் தீவிர மறுஆய்வு (SIR) திட்டத்தின் கீழ் வாக்காளர் பட்டியல் திருத்தங்களைப் பயன்படுத்தி, உண்மையான வாக்காளர்களை நீக்கியும், நகல் வாக்காளர்களைச் சேர்த்தும் பாஜக மோசடி செய்ததாக நீண்ட காலமாகவே குற்றம் சாட்டி வருகின்றன. இந்த காட்சிப் பதிவும், தனிப்பட்ட தகவலாக இருந்தாலும், அந்தக் குற்றச்சாட்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தக் காட்சிப் பதிவில் விவரிக்கப்பட்ட நடைமுறை பரவலாக உள்ளது என்பதற்குச் சரிபார்க்கப்பட்ட ஆதாரம் எதுவும் இல்லை என்றாலும், ஏற்கெனவே பிளவுபட்டிருக்கும் அரசியல் சூழலில், தனிப்பட்ட தகவல்கள் எவ்வளவு விரைவாக ஆயுதமாக மாற்றப்பட முடியும் என்பதை இந்தச் சம்பவம் பிரதிபலிக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *