எச்சரிக்கை!

1 Min Read

செல்போன் சார்ஜில் இருந்தபோது பேசியவர் உயிரிழப்பு: மின்சாரம் பாய்ந்து

சென்னை, மே 9 – பழைய வண்ணையில் அலை பேசியை மின்னிணைப்பில் போட்டபடி பேசிய டீ மாஸ்டர் மின்சாரம் பாய்ந்து இறந்தார். பழைய வண்ணை, கெனால் தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் (22). இவர் மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

அங்குள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு தங்கி இருந்தார். நேற்று முன்தினம் (7.5.2023) இரவு பணி முடித்து வீட்டுக்குச் சென்ற காமராஜ் அலைபேசியை மின்னிணைப்பில் போட்டுவிட்டு அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வித மாக மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி, வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடம் விரைந்து காமராஜ் சடலத்தை மீட்டு உடற் கூராய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *