வேண்டாம் இந்த விபரீதம்

Viduthalai
2 Min Read

பிளஸ்-2 தேர்வில் தோல்வி: 

5 மாணவ, மாணவிகள் தற்கொலை 

சென்னை, மே 9 – பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று (8.5.2023) வெளியானது. இந்த தேர்வில் தோல்வி அடைந்த 4 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

சென்னை ஆவடி கோவர்த்தனகிரி, பாரதி நகர், 1ஆவது தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகன் தேவா (வயது 17). ஆவடி காமராஜர் நகரில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில், தமிழ், கணிப்பொறி பயன்பாடு ஆகிய 2 பாடங்களில் தோல்வி அடைந்தார்.

இதனால் விரக்தி அடைந்த தேவா, தனது வீட்டில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல் சென்னை புதுவண்ணை நகர் ஆவூர் முத்தையா தெருவை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி தாருண்யா (17) பிளஸ்-2 தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஓமந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமணி (19). கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்ததால், இந்த ஆண்டு தனித்தேர்வராக எழுதி னார். இதில் 29 மதிப்பெண்கள் எடுத்து மீண்டும் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த மாணவி ரமணி, மனவேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை முயற்சி

இதேபோல் வானூர் அருகே சேமமங்கலம் கிரா மத்தை சேர்ந்த அருந்ததி (18), திருச்சிற்றம்பலத்தில் உள்ள காந்தி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து, பொதுத்தேர்வு எழுதினார்.

600-க்கு 500 மதிப்பெண்ணுக்கு மேல் வரும் என்று நம்பினார். நேற்று தேர்வு முடிவு வெளியான நிலையில் அருந்ததி, 380 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந் தார். மதிப்பெண் குறைந்ததால் ஏமாற்றம் அடைந்த மாணவி, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த நாராயண குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அரி (வயது 17), தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். மாணவர் அரி 11ஆம் வகுப்பில் 3 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை, அதற் கும் தேர்வு எழுதி இருந்தார்.

இந்தநிலையில் நேற்று தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பாக தேர்வு முடிவு குறித்த பயமும், கலக்கமும் ஏற்பட்டதால் காலை 8 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரி மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட அரி 4 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை, பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபசிறீ மகா பிரத்திநிஷா (17). பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர், 5 பாடங்களில் தோல்வி அடைந்தது தெரியவந்தது. இத னால் அவர் மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *