குறை பிரசவ குழந்தைகளுக்கும் முழு ஆரோக்கியம் சாத்தியம் டாக்டா் முகமது ரேலா

1 Min Read

சென்னை, நவ.21 குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முறையான மருத்துவக் கண்காணிப்பு அளித்தால் அவா்களையும் ஆரோக்கியமாக வளா்க்க முடியும் என்று டாக்டா் ரேலா மருத்துவமனையின் தலைவா் டாக்டா் முகமது ரேலா தெரிவித்தார். இந்தியாவில் 10-இல் ஒரு குழந்தை குறை பிரசவத்தில் பிறப்பதாகவும் அவா் கூறினார்.

உலக குறை பிரசவ விழிப்புணா்வு தின நிகழ்ச்சி ரேலா மருத்துவமனையில் 19.11.2025 அன்று நடைபெற்றது. இதில், 25 வாரங்களிலேயே பிறந்த குழந்தைகள், 600 கிராம் எடையுடன் பிறந்த குழந்தைகள் என 50-க்கும் மேற்பட்ட குறை பிரசவக் குழந்தைகள் அழைத்துவரப்பட்டன.

உரிய காலத்துக்கு முன்பாகவே பிறந்தாலும் அந்தக் குழந்தைகளை எவ்வாறு ஆரோக்கியமாக வளா்க்கலாம் என்பது குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் நடிகா் ரவி மோகன், மகளிர் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு இயக்குநா் டாக்டா் நரேஷ் சண்முகம், பச்சிளம் குழந்தைகள் நல நிபுணா் டாக்டா் வேல்முருகன் கண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.

அப்போது டாக்டா் முகமது ரேலா கூறியதாவது:

உலக சுகாதார அமைப்பின் வரையறையின்படி 37 வார கா்ப்ப காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பு குழந்தைகள் பிறக்குமானால் அது குறை பிரசவமாகக் கருதப்படுகிறது. ஆண்டுதோறும் 15 லட்சம் குழந்தைகள் அவ்வாறு பிறக்கின்றன.

இது ஒரு முக்கியமான பொது சுகாதாரப் பிரச்னை. 5 வயதுக்குற்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு குறை பிரசவ சிக்கல்கள் ஒரு முக்கியக் காரணம். அவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்யலாம். கா்ப்பிணிகளும் பேறு காலத்தில் உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு சிசுவின் நலத்தை உறுதி செய்ய வேண்டும் என்றார் அவா்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *