நாம் இன்று மனிதனாக உலவ முடிகிறது என்றால் தந்தை பெரியார் கொடுத்த தைரியம், போராடி பெற்றுக் கொடுத்த உரிமைகள் போன்றவைதான் காரணம். பெண்களை அடிமையாக வைத்திருந்தார்கள் அவர்கள் விடுதலைக்காக பெரியார் போராடினார். சமூக நீதிக்காக அவர் போராடவில்லை என்றால் கிராமத்தில் மேல்குடி மக்கள் இருக்கின்ற பகுதியில் நாம் நடக்கவே முடியாது நிலைமை இன்றும் இருந்திருக்கும். மத நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகளை வைத்து நம்மை அடிமையாக வைத்திருந்தார்கள். அந்த அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும் என்றால், மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டும். மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்றால், அதற்கு காரணமான மதத்தை ஒழிக்க வேண்டும்: கடவுளின் பெயரால் எழுதப்பட்ட மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்றால், கடவுளை எதிர்க்க வேண்டும். மேல் தட்டு மக்கள் தங்கள் வசதிக்காக கடவுள் நம்பிக்கை கொண்டு மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த நிலையை மாற்றி கடவுள் எதிர்ப்பு இயக்கத்தை தொடங்கி கீழ்த்தட்டு மக்களும் சமமாக உலா வருவதற்கு தந்தை பெரியார் தான் காரணம் என்று பேசிய காணொலி நம்மை மனிதனாக உயர்த்தியவர் பெரியார் என்ற தலைப்பிடப்பட்டு Periyar Vision OTT இல் வெளியாகி இருக்கிறது. இன்றே காணுங்கள்.
– எல். அறிவுடை நம்பி
கொடைரோடு
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்! இணைப்பு : periyarvision.com
