எனது வேண்டுகோள்

1 Min Read

தமிழகத் தோழர்களே! உங்கள் வட்டத்தில், ஊரில் பகுத்தறிவுக் கழகம், சிந்தனையாளர் கழகம், ஆராய்ச்சியாளர் கழகம் என்பனவாகியவைகளில் ஏதாவது ஒன்றைத் துவக்கி வைத்தீர்களா? இல்லாவிட்டால் அருள்கூர்ந்து உடனே பகுத் தறிவுக் கழகத்தைத் துவக்கி வைத்து எழுதுங்கள். தமிழ்நாட்டில் சென்னை முதல் அநேக இடங்களில் ஏற்படுத்தப்பட்டாய் விட்டது. மூட நம்பிக்கையால் அறிவிழந்த, மானமிழந்த தமிழர் பகுத்தறிவினால்தான் பெரிதும் மனிதனாக, மனிதத் தன்மை அடைய முடியும், முன்னேறவும் முடியும். இது உறுதி.

நம்நாட்டு ஜனநாயகம் மனித சமுதாயத்தின் ஒழுக்கம், நேர்மை, மானம், மரியாதை, மனிதத் தன்மை, அந்தஸ்து முதலிய மனிதப் பண்பு யாவையும் பெரிதும் கெடுத்து பாழாக்கி விட்டது.

அரசியல் சிப்பந்திகளை, உத்தியோகஸ்தர்களை, மாணாக் கர்களை, நன்றியற்றவர்களாக ஆக்கியதுடன் இனி எளிதில் தலையெடுக்க முடியாதபடி செய்து வருகிறதுடன் வருணாசிரம ஆட்சி ஏற்படுமோ என்று பயப்படவும் வேண்டி இருக்கிறது.

இந்த நிலை மாற வேண்டும். இதற்கு ஆங்காங்கு பகுத்தறிவுக் கழகங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

(தந்தை பெரியார் அவர்கள் அறிக்கை – ‘விடுதலை’ 28.11.1970)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *