அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் சேரவேண்டும்: மேனாள் ஒன்றிய அமைச்சர் பரூக் அப்துல்லா பேட்டி

2 Min Read

அரசியல்

சிறீநகர். மே 9 –  அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடா ளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சி களை ஒருங்கிணைத்து போட்டியிட செய்யும் முயற்சி நடந்து வருகிறது. குறிப்பாக இதில் அய்க் கிய ஜனதா தளம் கட்சியின் தலை வரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான பரூக் அப்துல்லா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை பற்றி என்னால் அவ்வளவு உறுதி யாக கூற முடியவில்லை. ஆனால் நாடாளுமன்ற மக்களவை தேர் தலை பொறுத்தமட்டில், மாநிலங் கள் இப்போது முக்கியம். எல்லா எதிர்க்கட்சிகளும் இதை உணர வேண்டும்.

மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா வலுவாக இருக்கிறார் என்றால் அங்கே அவர் நல்ல படியாக செயல்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். அதே போன்று பீகாரில் நிதிஷ்குமாரின் அய்க்கிய ஜனதாதளமும், ராஷ் டிரிய ஜனதாதளமும் வலிமையாக இருக்கிறபோது, அவர்களுக்கு தடைகளை உருவாக்கக்கூடாது. இதேபோன்று உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி நன்றாக இருக்கிறபோது, அவருக்கும் தடை ஏற்படுத்தக் கூடாது.

மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, உண்மையிலேயே நீங்கள் அவர்களை (பா.ஜ.க.) தோற்கடிக்க வேண்டும் என்று விரும்பினால், அவர்களுக்கு எதிராக ஒரே வேட்பாளர்தான் எதிர்க்கட்சிகள் சார்பில் களமிறக்கப்பட வேண் டும் காங்கிரஸ் கட்சி எங்கே வெற்றி பெறுமோ, அங்கே மற்றொ ருவர் போட்டியிட வேண்டாம். எங்கே இன்னொரு கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதோ அங்கே அவர்களுக்கு விட்டுத் தரவேண்டும். இது அவர்களை (பா.ஜ.க.) தோற்கடிப்பதற்கான வழி ஆகும்.

இதை எதிர்க்கட்சி தலைவர்கள் பரிசீலிக்க வேண்டும். இதை அவர் கள் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன். சி.பி.அய்., அமலாக்கப் பிரிவு இயக்குநரகம் போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளும், வருமான வரித்துறையும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. மற்றவர் களும் இதைச் செய்திருக்கிறார்கள். 

ஆனால் அவர்கள் (பா.ஜ.க.) மற்றவர்களை விட 100 முறை அதி கமாக செய்கிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் அமையக்கூடிய அரசு, எதிர்க்கட்சிகளை அச்சுறுத் துவதற்கு இதைச் செய்யாது என நம்புகிறேன். 

ஜனநாயக நாட்டில் இத்தகைய அமைப்புகளை எதிர்க் கட்சி களுக்கு எதிராக பயன்படுத் துவது முற்றிலும் தவறானது. இதைச் செய்திருக்கக்கூடாது. நாட்டுக்கு எதிர்க்கட்சி தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *