கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 20.11.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* மேற்கு வங்கத்தில் பரபரப்பு எஸ்அய்ஆர் பணிச் சுமையால் பிஎல்ஓ தூக்கிட்டு தற்கொலை; உயிர்களை காக்க உடனடியாக எஸ்அய்ஆர் பணிகளை நிறுத்த வேண்டும்’’: தேர்தல் ஆணையம் மீது மம்தா தாக்கு.

* கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் முடக்கம் ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்: கோவையில் இன்று மதுரையில் நாளை நடக்கிறது.

* தீர்ப்பாயங்கள் சீர்திருத்த சட்டத்தின் முக்கிய சரத்துகள் ரத்து: நீதிமன்றம் அதிரடி, நீதித்துறை சுதந்திரம் மற்றும் அதிகார வரம்பை மீறும் 2021 சட்டத்தில் உள்ள சரத்துகளை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது. இது அரசியலமைப்புக்கு எதிரானது என தீர்ப்பளிக்கிறோம் என நீதிபதிகள் கருத்து.

* ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஅய் விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு. சிபிஅய் விசாரணைக்கு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மாற்றியது ஏன்? இது ஒரு சரியான நடவடிக்கை கிடையாது என்று நீதிபதிகள் காட்டம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பாஜகவில் வாரிசு அரசியல்: வரவிருக்கும் மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்களில் வாரிசு அரசியலில் பாஜக முன்னிலை வகிக்கிறது, டிசம்பர் 2, 2025 அன்று நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்களில் குறைந்தது 33 பாஜக தலைவர்கள் தங்கள் மனைவிகள், குழந்தைகள் மற்றும் உறவினர்களை நிறுத்தியுள்ளனர்.

* மசோதாக்களுக்கு ஒப்புதல் விவகாரம் குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

டெக்கான் ஹெரால்ட்:

* தமிழ்நாட்டில் 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைய ‘டிஜிஅறிவு’ முயற்சி: நுகர்வோர் மின்னணு நிறுவனமான சாம்சங் புதன்கிழமை அய்க்கிய நாடுகளின் குளோபல் காம்பாக்ட் நெட்வொர்க் இந்தியாவுடன் இணைந்து ‘டிஜிஅறிவு – தொழில்நுட்பம் மூலம் மாணவர்களை மேம்படுத்துதல்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக மூத்த நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் கையெழுத்து.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *