கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் நீதிக்கட்சி ஆற்றிய தொண்டுகள் நடேச முதலியார் உரையிலிருந்து…

1 Min Read

ஒரு கிறிஸ்தவர் லா காலேஜ் பிரின்சிபாலாக நியமனம் செய்யப்பட்ட தற்கும், சட்டசபை தலைவராக நியமிக்கப்பட்டதற்கும், பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மெம்பராக நியமிக்கப்பட்ட தற்கும், ஜஸ்டிஸ் கட்சியே காரணம். கிறிஸ்தவர்கள் அய்கோர்ட் ஜட்ஜ்களாகவும், ஹோம் மெம்பராகவும் நியமிக்கப்பட்டதற்கும், ஜஸ்டிஸ் கட்சியாரே நேர்முகமாகவும், மறைமுகமாகவும் காரணஸ்தராயிருந் திருக்கிறார்கள்.

முஸ்லீம்களுக்கு ஒரு தனி கலாசாலை ஸ்தாபிக்கப் பட்டதற்கும், ஜஸ்டிஸ் கட்சியாரே காரணம். ஒரு முஸ்லீம் கார்ப்பரேஷன் கமிஷனராக நியமிக்கப்பட்டதற்கும், ஒருவர் கைத்தொழில் டைரக்டராக நியமிக்கப்பட்டதற்கும், ஒருவர் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மெம்பராக நியமிக்கப்பட்டதற்கும், ஒருவர் சென்னை மேயராக நியமிக்கப்பட்டதற்கும், ஒருவர் ஹோம் மெம்பராகவும், ஆக்டிங் கவர்னராகவும் நியமிக்கப்பட்டதற்கும், ஜஸ்டிஸ் கட்சியே காரணம். அவர்கள் இன்னும் எவ்வளவோ செய்திருக்கிறார்கள்… ஜஸ்டிஸ் கட்சியார் முயற்சியின் பயனாக தென்னாட்டில் இந்து-முஸ்லீம் பிணக்குமில்லை.

இந்த மாகாணத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் எப்பொழுதும் வெகு அய்க்கியமாக இருந்து வருகிறார்கள். நாங்கள் முஸ்லீம்களை சகோதரர்களாக மதித்து அவர்களது உரிமைகளுக்காகப் போராடி வருகிறோம்.

(‘நகர தூதன்’ திருச்சி, 4.10.1930, பக்.10)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *