மக்களைச் சந்திக்க மலைப் பாதையில் 23 கிலோ மீட்டர் நடந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

1 Min Read

சேலம், நவ.20- தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம்  (18.11.2025) இரவு சேலத்திற்கு வந்தார். பின்னர் அவர் சேலம் குமாரசாமிப்பட்டி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் திடீரென ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து இரவில் சேலத்தில் உள்ள ஆய்வு மாளிகையில் தங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (19.11.2025) அதிகாலை ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி கிராமத்தில் இருந்து கருங்காலி, குடவம்பட்டி வழியாக 23.5 கிலோ மீட்டர் தூரம் ஏற்காடு மலைக்கிராமங்களுக்கு நடந்தே சென்ற மக்களை சந்தித்தார். அவருடன் மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் யோகானந்த் மற்றும் அதிகாரிகளும் நடந்து சென்றனர். அப்போது அமைச்சர் நடந்து செல்லும் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சொனப்பாடி மலைக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களை சந்தித்து மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து கலந்துரையாடினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *