‘தினமலரின்’ இரட்டை நாக்கு!

1 Min Read

அரசியல்

‘தினமலர்’ மே 3 ஆம் தேதி வெளியிட்ட செய்தியில் கருநாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளின் வேதிக்கழிவுகளை ஆற்றில் திறந்துவிடுவதால் ஆற்று நீர் கெட்டவாடை வீசுவதோடு நுரைபொங்கி வருவதாக எழுதியுள்ளது., 

 அதே தினமலரில் (7.5.2023) நேற்று முன்தினம் முதல் பக்கத்தில் இரு ஆண்டு சாதனைகளில் இதுவும் ஒன்றும் என்று கூறி திமுக ஆட்சியை குறை கூறியுள்ளது. 

 தமிழ்நாடு அரசின் சூழியல் பாதுகாப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசும், பல்வேறு சூழியல் அமைப்புகளும் விருதுகள் கொடுத்து பாராட்டியுள்ளன. நேரம் இருக்கும் போது “தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் இணையதளம்” சென்று பார்க்கவும்.   4ஆண்டுகளாக குறுக்கு வழியில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து, ஆண்டுக்கு ஒரு முதலமைச்சர் என்று மியூசிகல் சேர் விளையாட்டோடு, யார் அதிகம் கமிசன் வாங்குவார்கள் என்ற போட்டியும் அங்கு நடந்தது, 40 சதவீத கமிசன் என்பது காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டு அல்ல, பாஜக பிரமுகரும், தற்கொலை செய்துகொண்ட அரசு ஒப்பந்ததாரரும் சாகும் முன்பு வீடியோவில் கூறியது. 

தமிழ்நாடு அரசை குற்றம் சொல்ல ஒன்றுமே இல்லாத நிலையில், கருநாடகாவின் கயமைத்தனத்தால் விளைந்த ஆற்றுநீர் சீர்கேட்டை “இரண்டு ஆண்டு சாதனைகளில் இதுவும் ஒன்று” என்று கூறி தனது ஆதங்கத்தைக் கொட்டி வைத்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *