குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் அமைக்கபட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கான கீழ்காணும் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சமூகப்பணியாளர் இரண்டு – (2) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து இளங்கலை சமூகவியல் /சமூகப்-பணி /சமூக அறிவியல் கணினி ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு. பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்-னுரிமை வழங்கப்படும். கணினியில் பணிசெய்யத் தெரிந்திருக்க வேண்டும். 42 வயது மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது.
காலிப்பணியிடங்களை அதிகரிப்பதோ, குறைப்பதோ இத்துறையின் முடிவிற்கு உட்பட்டது.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் விவரங்கள் https://chennai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
மேற்காணும் பணியிடத்திற்கு நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் நபர், பணியில் சேரும் நாளன்று காவல்-துறை சரிபார்ப்பு சான்றிதழ் (Police Verification) கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.
தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு உரிய படிவத்தில் ஒளிப்படம் மற்றும் சுயக்கையொப்ப மிட்ட சான்றிதழ்களுடன் இணைத்து செய்தி வெளியீடு செய்யப்பட்ட பதினைந்து நாட்களுக்குள் மாலை 5.45 மணிக்குள் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ கிடைக்கு மாறு சமர்ப்பிக்கலாம்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,சென்னை – தெற்கு
எண்:1, புதுத்தெரு, ஜிசிசி வணிக வளாகம், முதல் மாடி, ஆலந்தூர், சென்னை – 600016. (ஆர்டிஓ அலுவலகம் அருகில்)
முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங் கள், நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைக் கொண்டிராதவர்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங் கள் ஆகியன பரிசீலிக்கப்படாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும், இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
