ஓசூரில் விமான நிலையம்! ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்

1 Min Read

சென்னை, நவ. 18 ஓசூரில் விமான நிலைய தளம் அமைக்க ஒப்புதல் வழங்கக் கோரி ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழு வதும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் முதலீடு களை ஈர்க்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர்பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.
அதைத்தொடர்ந்து, ஓசூர் அருகே சூளகிரி வட்டத்தில் உள்ள பேரிகை மற்றும் பாகலூர் ஆகிய பகுதிகளுக்கு இடையே விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு இடம் தேர்வு செய்தது.
இதையடுத்து, அப்பகுதியில் விமான நிலையத் தளம் அமைக்க ஒப்புதல் வழங்கக் கோரி ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது.
ஓசூர் பன்னாட்டு விமான நிலையத்தை, 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *