ஒன்றிய ஆயுத காவல் படையில் காலியிடங்களுக்கு யு.பி.எஸ்.சி., அமைப்புத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலியிடம்: எல்லை பாது காப்பு படை (பி.எஸ்.எப்.,) 86, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.,) 55, தொழில் பாதுகாப்பு படை 91, இந்தோ – திபெத் எல்லை போலீஸ் படை (அய்.டி.பி.பி.,) 60, சகஸ்ட்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) 30 என மொத் தம் 322 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தி ருக்க வேண்டும்.
வயது : 1.8.2023 அடிப்படையில் 20 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல்தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு.
தேர்வு மய்யம் : தமிழ்நாட்டில் சென்னை, மதுரை மட்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக் கட்டணம்: ரூ200. பெண்கள், எஸ்.சி., /எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 16.5.2023
விவரங்களுக்கு: upsc.gov.in