இப்படியும் ஒரு அவலமா? தந்தையின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவித்த நான்கு குழந்தைகள் கிராம மக்கள் வீடு வீடாக பணம் வசூலித்து இறுதி மரியாதை செய்த மனிதநேயம்!

சங்கராபுரம், நவ.17- சங்கராபுரம் அருகே தந்தையின் இறுதி மரியாதை செலவுக்கு பணம் இல்லாமல் அவரது குழந்தை கள் பரிதவித்தனர். இதனை கண்ட கிராம மக்கள் வீடு வீடாக பணம் வசூலித்து உடலுக்கு இறுதி மரியாதை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளி

சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது46). தொழிலாளியான இவருக்கு வசந்தா (40) என்ற மனைவியும், லாவண்யா (24),ரீனா (21), ரிஷிகா(17) ஆகிய 3மகள்களும், அபினேஷ் (13) என்ற மகனும் உள்ளனர்.

வசந்தா உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் கமலக்கண்ணன் கூலி வேலை செய்து தனது குழந்தைகளை பள்ளி, கல்லூரியில் படிக்க வைத்தார்.

இந்த நிலையில் கமலக் கண்ணனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது சீறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கமலக்கண்ணன் உள்நோயாளியாக அனுமதிக்கப் பட்டு கடந்த 4 மாதங்களாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி மரணம்

இதனால் வருமானம் இல்லாததால் குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டது. பொறியியல் படித்து வந்த அவரது மகள் லாவண்யா கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் தனது படிப்பை யாதியிலேயே நிறுத்திவிட்டார்.

அதேபோல் 8ஆம் வகுப்பு படித்து வந்த ரீனா, 10ஆம் வகுப்பு படித்து வந்த ரிஷிகா ஆகியோரும் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தினர். அபினேஷ் மட்டும் பூட்டை அரசு உதவிபெறும் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த நிலையில் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருந்த கமலக்கண்ணன் சிகிச்சை பலனின்றி கடந்த 14ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் அடக் கம் செய்வதற்காக சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. தகவல் அறிந்து வந்த உறவினர்கள், கிராம மக்கள் கமலக்கண்ணன் உடலுக்கு இரங்கல் செலுத்தினர்.

ஆனால் தாய், தந்தையை இழந்த 4 குழந்தைகளும் தந்தையின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் பரிதவித்தனர். உறவினர்களும் ஏழ்மையான நிலையில் இருந்ததால் அவர்களாலும் உதவி செய்ய முடியாத சூழ்நிலை இருந்தது.

உடல் அடக்கம்

இதை அறிந்து அந்த குழந்தை களின் மீது மனம் இரங்கிய கிராம மக்கள் கமலக்கண்ணனின் உடலை அடக்கம் செய்ய தாங்களாகவே முன் வந்தனர். பின்னர் அவர்கள் வீடு வீடாக சென்று பணம் வசூலித்து கமலக்கண்ணனின் உடலை முன்னின்று அடக்கம் செய்தனர்.

உடல் நலக்குறைவால் இறந்த தந்தையின் இறுதி மரியாதை செலவுக்கு பணம் இல்லாமல் அவரது குழந்தைகள் தவித்ததை கண்டு கிராம மக்கள் தாங்களாகவே முன் வந்து உடலை அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *