பெரியார் பெருந்தொண்டர் மயிலை நா.கிருஷ்ணன் மறைவு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நேரில் மரியாதை

2 Min Read

திண்டுக்கல், நவ. 17- முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனக் குழு உறுப்பினரும், சென்னை பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவருமான மயிலை.நா.கிருஷ்ணன் 14.11.2025 அன்று அதிகாலை 03.00 மணியளவில் மருத்துவமனையில் மறைவுற்றார். தகவல் அறிந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், மயிலை.நா.கிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார். மறைந்த மயிலை. நா.கிருஷ்ணன் அவர்கள் கொள்கையில் தீவிரப் பற்றாளர், தமிழர் தலைவர் அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர், பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவராக பல ஆண்டுகள் திறம்பட நடத்தியவர், சென்னை வியாபாரிகள் சங்கத் தலைவராக இருந்தவர் ஆவார்.

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் நேரில் சென்று மயிலை.நா.கிருஷ்ணன் அவர்களின் உடலுக்கு கழகத் தோழர்களுடன் இணைந்து கழகக் கொடியினைப் போர்த்தி, மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். மறைந்த மயிலை.நா.கிருஷ்ணன் அவர்களின் துணைவியார் பரமேஸ்வரி, மகன்கள் அசோக், மதிவாணன், மகள்கள் சாந்தி, ஆனந்தி ஆகியோருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்டத்தலைவர் இரா. வீரபாண்டியன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் மதுரை தே.எடிசன்ராஜா, வே.செல்வம், மதுரை மாவட்டச் செயலாளர் இரா.லீ. சுரேஷ், முருகேசன், திண்டுக்கல் மாவட்ட கழக காப்பாளர் வழக்குரைஞர் கொ.சுப்பிரமணியம், மாவட்ட துணைத் தலைவர் த.கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் பெ. கிருஷ்ணமூர்த்தி, திராவிடர் தொழிலாளர் கழக பேரவைச் செயலாளர் மு.நாகராசன், மாநகரத் தலைவர் அ.மாணிக்கம், மாநகரச் செயலாளர் தி.க.செல்வம், கே.ஜி.எஸ்.ஜீவானந்தம், இரா. முருகன், இரா.சுரேஷ், கே.கருணாநிதி. கோ.சரவணன், செபாஸ்டின் சின்னப்பர், அ.ஜெயப்பிரகாஷ், பழநி மாவட்ட துணைத் தலைவர் ஆ.இராமகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் ஒட்டன்சத்திரம் வழக்குரைஞர் ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினார்கள். மாலை 4.30 மணியளவில் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. வீரவணக்கம், வீரவணக்கம் அய்யா மயிலை.நா.கிருஷ்ணன் அவர்களுக்கு வீரவணக்கம் என்ற தோழர்களின் முழக்கத்துடன் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் தோழர்களுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரினை தோளில் சுமந்து சென்றனர். எவ்வித மூடச்சடங்குகளும் இல்லாமல் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *