பெரியார் மருந்தியல் கல்லூரிக்குத் தேசிய தன்னார்வ குருதிக்கொடை நாளில் பாராட்டு

1 Min Read

திருச்சி, நவ. 17- தேசிய தன்னார்வ குருதிக்கொடை நாளினை முன்னிட்டு 14.112025 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். பாலாஜி தலைமையில் திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரியின் முதன்மையர் மருத்துவர் எஸ். குமரவேல் அவர்கள் அரசு மருத்துவமனையில் இயங்கும் குருதி வங்கிக்கு தொடர்ந்து குருதிக்கொடை வழங்கி மருத்துவப்பயனாளிகளின் சிகிச்சைக்கு பேருதவி மற்றும் புரிந்தமைக்கான 2024ஆம் ஆண்டிற்கான பாராட்டுச்சான்றிதழ் நினைவுப்பரிசினை பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு வழங்கி சிறப்பித்தார்.

பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசினை பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் அ. ஜெசிமா பேகம் மற்றும் பேராசிரியர் எஸ். பிரியதர்ஷினி ஆகியோர் பெற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *