நவீன் பட்நாயக் – நிதீஷ்குமார் சந்திப்பு அரசியல் பின்னணி என்ன?

Viduthalai
2 Min Read

அரசியல்

புவனேசுவரம், மே 10 ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சந்தித்து பேசினார். இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.  நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024ஆம் ஆண்டு நடக்க உள்ள நிலையில், பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றி ணைக்கும் முயற்சியில் அய்க்கிய ஜனதாதளம் தலைவரும், பீகார் முதல மைச்சருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார்.

அவர் எதிர்க்கட்சி தலைவர்களான காங் கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே, மேனாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்காள முதல மைச்சர் மம்தா  சமாஜ் வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் என பல்வேறு தலைவர்களை தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார். இந்த நிலையில் நிதிஷ்குமார் நேற்று (9.5.2023)  ஒடிசா தலைநகர் புவனேசுவரம் சென்றார். அங்கு அவர் முதலமைச் சரும்  பிஜூ ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மதிய விருந்துடன் கூடியதாக அமைந்தது. இருவரும் என்ன பேசி னார்கள் என்ற பரபரப்பு பத்திரிகையாளர்கள் மத்தியில் தொற்றிக் கொண்டது. இரு தலை வர்களும் பத்திரிகையாளர் களைச் சந்தித்தனர். ஆனால் இருவருமே அர சியல் பேசவில்லை என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக நவீன் பட்நாயக் கூறியதாவது:- நிதிஷ்குமாருக்கும், எனக் கும் நல்ல உறவு உண்டு. நாங்கள் இருவரும் வாஜ்பாய் அரசில் ஒன்றாகப் பணியாற்றி இருக்கிறோம். நிதிஷ்குமாரை இப் போது சந்தித்து பேசிய தில் மிகுந்த மகிழ்ச்சி அடை கிறேன். பூரியில் உள்ள நிலம் பற்றி விவா தித்தோம்.  

இதேபோன்று நிதிஷ்குமார் கூறுகையில், “நவீன் பட்நாயக்குடன் எனக்கு நல்ல உறவு உண்டு. நான் ஒடிசாவுக்கு அடிக் கடி வந்துள்ளேன். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றால்தான் இங்கு வர முடியவில்லை. நாங்கள் அரசியல் பற் றியோ, தேர்தல் கூட்டணி குறித்தோ பேசவில்லை. நவீன் பட்நாயக்குடன் உறவு வலுவாக உள்ளது. அவருடன் அரசியல் பேசும் தேவை இல்லை” என தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *