டில்லி பல்கலைக் கழகத்திற்குள் ராகுல்காந்தி நுழையக்கூடாதாம்: பின்னணி என்ன?

1 Min Read

டில்லி, மே 10 – டில்லி பல்கலைக்கழகத்திற்குள் அனுமதியின்றி நுழையக்கூடாது என காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்திக்கு டில்லி பல்கலைக்கழகம் அறிவிக்கை அனுப்ப வுள்ளதாக டில்லி பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்தார். 

இதுகுறித்து டில்லி பல்கலைக்கழக பதிவாளர் விகாஸ் குப்தா கூறுகையில், 

கடந்த வாரம் ராகுல் காந்தி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென டில்லி பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து அங்குள்ள ஆண்கள் விடுதிக்குச் சென்று மாண வர்களைச் சந்தித்துள்ளார். 

அவர் பல்கலைக்கழகத்திற்கு நுழையும் போது மாண வர்கள் பலர் மதிய உணவு அருந்தி வந்தனர். அப்போது மாணவர்களுடன் உரையாடிய ராகுல் அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுள்ளார். 

இந்த வருகை மாணவர்களின் பாதுகாப்பைக் குறைப்ப தாக உள்ளது. இதுபோன்ற செயல் மீண்டும் நடைபெறக் கூடாது என்றும், மாணவர்களின் பாதுகாப்பை பாதிக்கக் கூடாது என்றும் ராகுல் காந்திக்கு அறிவிக்கை அனுப்ப உள்ளதாக அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *