பெரியார் உலகத்திற்கு ரூ.10 லட்சம் நன்கொடை திரட்டித் தருவோம் சோழிங்கநல்லூர் மாவட்ட கழக மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

1 Min Read

சோழிங்கநல்லூர், நவ. 16– சோழிங்க நல்லூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடலில் கூட்டம் 9.11.2025 அன்று காலை 10 மணிக்கு விடுதலை நகர் பெரியார் படிப்பகத்தில் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு தலைமையில் மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை ஆர்டி வீரபத்திரன் முன்னிலையில் நடைபெற்றது.

தீர்மானங்கள்

சென்னை மண்டலத் தலைவராக இருந்து அரும்பணியாற்றிய ரத்தினசாமி மற்றும் அவரது இணையர் இர. ஆதிலட்சுமி அம்மா ஆகியோரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்து ஒரு நிமிடம் அமைதியாக இருந்து மரியாதை செலுத்தப்பட்டது.

செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர்கழக மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு 10 லட்சம் நிதி திரட்டித் தர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

வரும் ஜனவரி மாதம் 3, 4 தேதிகளில் மும்பையில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் நமது மாவட்டக் கழகத்தின் சார்பில் குறைந்தது 10 பேர் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெற்ற மாநாட்டிற்கு நிதி வசூலில் இரண்டாமிடத்தைப்பிடித்ததற்கு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கபபட்டது.பெருமளவில் நிதி திரட்டிக் கொடுத்த மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ஆனந்தன் ஆகியோருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஆர்.டி.வீரபத்திரன், வேலூர் பாண்டு க.தமிழ் இனியன், ஆர்.கலைச்செல்வன்,  பி.சி.ஜெயராமன், பி.சரவணகுமார், மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *