சென்னை, நவ.16– சென்னை மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் கடந்த ஆகஸ்டு 9-ஆம் தேதி தொடங்கியது. மாநகராட்சி கால்நடைத்துறை அதி காரிகளும், மருத்துவ பணியாளர்களும் வீதி, வீதியாக சென்று தெரு நாய் களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள்.
சென்னை மாநகராட்சியில் இதுவரை 1 லட்சத்து 22 ஆயிரத்து 625 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப் பூசி செலுத்தப்பட் டுள்ளது. 5 ஆயிரத்து 483 வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. செல்லப்பிராணிகளுக்காக உள்ள 6 சிகிச்சை மய்யங்களில் தினமும் காலை 8 மணி முதல் 3 மணி வரையில் உரிமம் வழங்குதல், மைக்ரோசிப் செலுத்துதல், ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல் ஆகிய பணிகள் நடைபெறுகிறது.
இன்றும் (16.11.2025), 23-ஆம் தேதியும் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடை பெறும். டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்து தெரு நாய்களுக்கும் ரேபிஸ் தடுப் பூசி செலுத்தப்படும். 24-ஆம் தேதிக்குள் செல்லப் பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்தி, உரிமம் பெறாத உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
டில்லி செங்கோட்டை
இன்று முதல் மீண்டும் திறப்பு
இன்று முதல் மீண்டும் திறப்பு
பார்வையாளர்கள் வர அனுமதி
புதுடில்லி, நவ.16 டில்லி செங்கோட்டை பார்வையாளர் களுக்காக இன்று 16ஆம் தேதி முதல் எப்போதும் போல் திறக்கப்படும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
நவ.10ஆம் தேதி டில்லி செங் கோட்டை அருகே லால் குயிலா மெட்ரோ ரயில் நிலையம் பகுதியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் பலர் பலியாகினர். ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
தற்கொலைப் படையினரின் கார் குண்டுவெடிப்பை அடுத்து தலைநகர் டில்லியில் பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளிலும்,மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது.
இந் நிலையில், குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து மூடப்பட்ட டில்லி செங்கோட்டை வளாகம், மக்களின் பார்வைக்காக இன்று (நவ.16) முதல் மீண்டும் திறக்கப்படுவதாக தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அறிவித்து உள்ளது. எப்போதும் போல் பார்வையாளர்கள் வரலாம் என்றும் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியில் அருகே லால் குயிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் 2 மற்றும் 3ஆவது நுழைவு வாயில்கள் திறக்கப்பட்டு விட்டதாக டில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்த அதே நாளில், இந்த அறிவிப்பை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
