கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

15.11.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தெலங்கானா ஜூபிலி ஹில்ஸ் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றி; பாஜக வேட்பாளர் டெபாசிட் இழப்பு.

* பீகார் தேர்தல் தோல்வி, காங்கிரஸின் நிலைப்பாட்டில் உள்ள ஆழ்ந்த பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.   கூட்டணி அரசியலில் முன்னிலை பெறத் தவறுவது, பழைய மனப்போக்கும் செயலற்ற பணித்திட்டங்களுமே காரணம். நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட எதிரணியை எதிர்கொள்ள, காங்கிரஸ் உடனடியாக தன்னைக் களைந்து, தரைமட்டத்தில் மீண்டும் உயிர்ப்பூட்ட வேண்டும் என்கிறது தலையங்கம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பீகார் தேர்தல் முடிவுகள் ‘பிரமாண்டமான அளவில்’ ‘வாக்களிப்பு சோரி’ என்பதைக் காட்டுகின்றன. பீகார் மக்களின் முடிவை காங்கிரஸ் கட்சி மதிக்கிறது என்றும், அரசியலமைப்பு நிறுவனங்களை தவறாக பயன்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் சக்திகளை தொடர்ந்து எதிர்த்து போராடும் என்றும் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *