டி.ஆர்.பி. ராஜா அமைச்சராகிறார் பால்வளத் துறை அமைச்சர் நாசர் நீக்கம்

1 Min Read

அரசியல்

சென்னை, மே 10- தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் நீக்கப்பட்டார். மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகிறார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநரின் முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று, மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா தமிழ்நாடு அமைச்சர வையில் இடம்பெறுகிறார். 

மேலும், தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால் வளத்துறை அமைச்சர் நாசர் விடுவிக்கப்படுகிறார். வரும் மே 11ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி யேற்பு விழாவில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாண மும் செய்து வைப்பார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பி.ராஜாவுக்கு என்ன துறை ஒதுக்கப்படும் என்பது குறித்து நாளை அறிவிக்கப் படவுள்ளது. அப்போது மேலும் சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *