டி.ஆர்.பி. ராஜா அமைச்சராகிறார் பால்வளத் துறை அமைச்சர் நாசர் நீக்கம்

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, மே 10- தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் நீக்கப்பட்டார். மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகிறார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநரின் முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று, மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா தமிழ்நாடு அமைச்சர வையில் இடம்பெறுகிறார். 

மேலும், தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால் வளத்துறை அமைச்சர் நாசர் விடுவிக்கப்படுகிறார். வரும் மே 11ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி யேற்பு விழாவில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாண மும் செய்து வைப்பார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பி.ராஜாவுக்கு என்ன துறை ஒதுக்கப்படும் என்பது குறித்து நாளை அறிவிக்கப் படவுள்ளது. அப்போது மேலும் சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *