கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு பள்ளிகளில் ஆய்வுப் பணிக்கு புதிய செயலி அறிமுகம்

சென்னை, நவ. 15- பள்ளிகளில் ஆய்வுப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் ‘பள்ளிப் பார்வை-2.0’ எனும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய செயலி

இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழ்நாட்டில் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க ‘பள்ளிப் பார்வை’ எனும் செயலி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.துறைசார்ந்த அலுவலர்கள் பள்ளி ஆய்வின்போது வகுப்பறை கற்பித்தல், மாணவர் வருகை, கற்றல் நிலை உள்ளிட்டவற்றை மய்யமாக கொண்டு இந்த செயலியில் குறிப்புகளை பதிவேற்றம் செய்து வந்தனர்.

தற்போது அதை மேம்படுத்தி ‘பள்ளிப் பார்வை-2.0’ செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் திறன் இயக்கத்தில் பயிற்சி பெறுபவர்களுக்கு மட்டுமே இனி மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும். அதே போல, அலுவலர்கள் பள்ளிகளில் ஆய்வு செய்யும்போது குறைந்தது 2 மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களையாவது கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.

ஆய்வுப் பணிகளை திறம்பட செய்யவும், முழுமையான மதிப்பீட்டை உறுதி செய்யவும் அனைத்து அலுவலர்களும் இந்த புதிய செயலியை பயன்படுத்த வேண்டும். இதை பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *