மறைவு – கழகத் தோழர்கள் மரியாதை

1 Min Read

அரசியல்

கண்ணந்தங்குடி மேலஎலந்த வெட்டி திராவிடர் கழக செயலாளர் மானமிகு கந்தசாமி அவர்களின் தாயார் நல்லம்மாள் (வயது 80) இன்று (10-5-2023) மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகி றோம். கழகத்தின் சார்பில் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும் தெரிவிக்கப்பட்டது. 

கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாவட்ட செயலாளர் அ. அருணகிரி, ஒன்றியத் தலைவர் த.ஜெகநாதன், மாவட்ட துனைச் செயலாளர் 

அ.உத்திராபதி,ஒன்றிய செயலாளர் நல்.பரமசிவம், பெரியார் வீர விளையாட்டுக்கழக மாநில செயலாளர் நா.இராமகிருஷ்ணன், ஒன்றி துனைத் தலைவர் இரா.துரைராசு, உரத்தநாடு நகர செயலாளர் பேபி.ரெ.ரவிச்சந்திரன், ஒன்றிய அமைப்பாளர் பு.செந்தில் குமார், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லப் பட்டு அ.இராமலிங்கம் ஆகியோர் மறைந்த அம் மையார் நல்லம்மாள் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர். 11-5-2023 வியாழன் காலை 10 மணிக்கு இறுதி நிகழ்வு நடைபெறுகிறது. 

தொடர்புக்கு: 8531878788, 8489496494

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *