இந்தியாவில் கரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது

1 Min Read

புதுடில்லி, மே 10- இந்தியாவில் நேற்று முன்தினம் (8.5.2023) 1,839 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 

நேற்று மேலும் 1,331 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. நேற்று முன்தினம் 1 லட்சத்து 44 ஆயிரத்து 767 மாதிரிகளைப் பரி சோதித்ததில் தினசரி பாதிப்பு விகிதம் 1 சத வீதத்துக்கும் கீழே (0.92 சதவீதம்) பதிவாகி உள் ளது. நாட்டில் இதுவரை கரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 72 ஆயிரத்து 800 ஆகி இருக்கிறது. நேற்று ஒரு நாளில் 3,752 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்திருக்கிறார்கள். இதுவரை குணம் அடைந் தோர் மொத்த எண் ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 18 ஆயிரத்து 351 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 2,436 குறைந்தது. இதன் மூலம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கரோனா மீட்பு சிகிச்சை பெறு வோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 742 ஆகக் குறைந்தது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *