பக்திப் படமாக இருந்தாலும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பகுத்தறிவு கருத்து!

பாமா விஜயம், நரகாசுர வதம், கிருஷ்ண துலாபாரம் ஆகிய மூன்று புராணக் கதைகளைக் கொஞ்சம் மாற்றி உருவான படம். ‘பாரிஜாதம்’.

முதல் பகுதி நரகாசுரன் கதை. தேவர்களிடமிருந்து பெற்ற வரங்களால் யாராலும் வெல்ல முடியாத சக்திகளைக் கொண்டிருக்கிறான், நரகாசுரன். அவனை யாராலும் அடக்க முடியவில்லை. எப்படி அடக்குவது என்றும் தெரியவில்லை. அவனுடைய முற்பிறப்பில் நரகாசுரனின் தாயாக இருந்த. இப்போது கிருஷ்ணரின் மனைவிகளில் ஒருவரான பாமாவால் அடக்க முடியும் என்று நினைக்கிறார் நாரதர். அதற்கான வேலைகளில் இறங்கும் அவர், அதைச் செய்து முடிப்பது ஒரு கதை.

மற்றொரு கதையில் அரிய பாரிஜாதப் பூவை ருக்மணிக்குக் கொடுக்குமாறு கிருஷ்ணனிடம் கொடுக்கிறார் நாரதர். இதனால் பாமாவுக்கு கோபம் வருகிறது. கிருஷ்ணன் மீது ருக்மணி கொண்டிருக் கும் பக்தி மற்றும் காதலை பாமாவுக்கு உணர்த்துவது இக்கதை. மூன்றாவது பகுதியில் என்.எஸ்.கிருஷ்ணன். டி.ஏ.மதுரம், புளிமூட்டை ராமசாமி, காகா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் காமெடி கதை இடம்பெற்றது.

என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் இணைந்து ‘பாரிஜாதப் பூ’ என்ற பாடலைப் பாடினர். அப்பாடல் அப்போது ரசிக்கப்பட்டது. என்.எஸ்.கிருஷ்ணன். ‘பாதுகாக்கணும் பாங்கு பார்க்கணும் பழக்கி வைக்கணும்’ என்ற பாடல் அப்போது மிகப் பிரபலமாக இருந்தது. பக்திப் படம் என்றாலும் பகுத்தறிவுக் கருத்துகளைக் கொண்டு என்.எஸ்.கிருஷ்ணன் அமைத் திருந்த நையாண்டி நகைச்சுவைக் காட் சிகள் அப்போது ரசிக்கப்பட்டன. போலி நாரதராக புளிமூட்டை ராமசாமி நடித்தார். ‘பாரிஜாதம்’ பூவுக்குப் பாரியும் சாதமும் என அவர் கொடுக்கும் விளக்கம் குபீர் நகைச்சுவை. ஜித்தன் பானர்ஜி ஒளிப் பதிவு செய்தார். 1950ஆம் ஆண்டு (நவ.9) வெளியான இந்தப் படம், வரவேற்பைப் பெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *