மோசமான ரயில் விபத்துகள் குறித்து ரயில்வே நிலைக்குழு விவாதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Viduthalai
2 Min Read

மக்களவைத் தலைவருக்கு  நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கடிதம்!

தமிழ்நாடு

சென்னை, நவ. 8- மோச­மான ரயில் விபத்­து­கள் குறித்து ரயில்வே நிலைக்­குழு விவா­திக்கநட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று மக்­க­ள­வைத் தலை­வர் ஓம்.பிர்­லா­வுக்கு தி.மு.க. பொரு­ளா­ள­ரும் நாடா­ளு­மன்ற தி.மு.க. குழுத் தலை­வ­ரு­மான டி.ஆர்.பாலு கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

நாடாளுமன்ற மக்­க­ள­வைத் தலை­வர் ஓம்.பிர்­லா­வுக்கு தி.மு.க. பொரு­ளா­ளரும் மக்களவை உறுப் பினருமான டி.ஆர்.பாலு எழு­தி­யுள்ள கடி­தம் வரு­மாறு:-  “சமீ­ப­மாக இரண்டு பெரிய ரயில் விபத்­து­கள் ஏற்­பட்டு ஏரா­ள­மா­னோர் பலி­யா­ன­து­டன் பல­ரும் படு­கா­யம் அடைந்­துள்­ள­னர். அத்­து­டன் குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு ரயில்வே சொத்­துக்­­களும் நாச­மாகி உள்­ளன.

2.6.2023 அன்றுஒடிசா மாநி­லம் பாலா­சார் மாவட்­டத்­தில் ஏற்­பட்ட முத­லா­வது ரயில் விபத்­தில், 2 ரயில்­கள் நேருக்கு நேர் மோதிக்­கொண்டு 296 பய­ணி­கள் பலி­யா­ன­து­டன், 1200 பேர் காய­ம­டைந்­துள்­ள­னர்.

1995 ஆம் ஆண்டு பிரோ­ஜா­பாத்­தில் நடை­பெற்ற ரயில் விபத்­திற்­குப் பிறகு நடந்த விபத்­தைக் காட்­டி­லும் மிக­வும் மோச­மா­னது என்­ப­தோடு, உல­கம் முழு­வ­தி­லும் 2004ஆம் ஆண்­டிற்­குப் பிறகு நடை­பெற்ற மிக­வும் பேர­ழிவு என்று தான் இந்த ரயில் விபத்து குறித்து குறிப்­பிட வேண்­டி­யுள்­ளது.

ரயில்வே அமைச்­ச­ரும், மூத்த அதி­கா­ரி­க­ளும் விபத்து நடை­பெற்ற இடத்­திற்கு விரைந்து சென்று, பல நாட்­கள் முகா­மிட்டு நிவா­ர­ணப் பணி­கள், மீட்­புப் பணி­கள் மேற்­கொண்­ட­னர் என்­பது வருத்­தத்­திற்­கு­ரிய ஒன்று. இந்த விபத்து குறித்து சி.பி.அய். விசா­ரணை மேற்­கொண்டு வரு­கி­றது என்று நான் கரு­து­கி­றேன். மேற்­கொண்டு என்ன நடக்­கி­றது என்று தெரி­ய­வில்லை.

இரண்­டா­வது ரயில் விபத்து அண்­மை­யில் 29.10.2023 அன்று ஆந்­திர மாநி­லம் விஜய நக­ரம் பகு­தி­யில் நடந்­தது. இரண்டு பய­ணி­யர் ரயில்­கள் ஒன்­று­டன் ஒன்று மோதிக் கொண்­ட­தில் 14 பேர் பலி­யா­ன­து­டன் 50 பேர் காய­ம­டைந்­துள்­ள­னர். மனி­தத் தவ­று­கள் இந்த விபத்­து­க­ளுக்கு கார­ணம் என்று சொல்­லப்­ப­டு­கி­றது. அதி­கா­ர­பூர்­வ­மாக எது­வும் தெரி­ய­வில்லை. மேலே குறிப்­பிட்ட இரண்டு விபத்­து­க­ளும் வருத்­த­ம­டை­யக் கூடிய ஒன்று. 5 மாத இடை­வெ­ளி­யில் இந்த இரண்டு ரயில் விபத்­து­கள் நடந்­தி­ருப்­பது அனைத்துத் தரப்­பி­ன­ரை­யும் கவ­லை கொள்­ளச் செய்­துள்­ளது.

இந்த விபத்­து­கள் தொடர்­பான முழு விப­ரங்­கள் எது­வும் ரயில்வே நிலைக்­கு­ழு­விற்கு தெரி­யப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. கெட்ட வாய்ப்பான கவ­லைக்­கு­ரிய இந்த விபத்­து­கள் குறித்து நாட்­டில் உள்ள மற்­ற­வர்­க­ளைப் போல ரெயில் நிலைக்­குழு உறுப்­பி­னர்­க­ளும் மிக­வும் வருத்­த­ம­டைந்­துள்­ள­னர். சிறீலங்­கா­வில் 2004 ஆம் ஆண்டு நடை­பெற்ற மோச­மான ரயில் விபத்­தைக் காட்­டி­லும் ஒடிசா விபத்து மிக மோச­மா­னது என்­ப­தால் அதை நிலைக்­கு­ழு­வின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­தி­ருக்க வேண்­டும்.

5 மாதங்­கள் கடந்­தும் அவ்­வாறு நிலைக்­கு­ழு­வின் கவ­னத்­திற்குக் கொண்டுவர­வில்லை.

பொது முக்­கி­யத்­து­வத்தை கருத்­தில் கொண்டு, தாங்­கள் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுத்துமேற்­கு­றிப்­பிட்ட வேண்­டு­ மென்றேநடை­பெற்ற ரயில் விபத்­து­கள் பற்றி ரயில்வே நிலைக்­குழு விரி­வாக விவா­திக்­கும் வாய்ப்­பினை ஏற்­ப­டுத்­தித் தரும்­படி கேட்­டுக்­கொள்­கி­றேன்.” 

இவ்­வாறு  தி.மு.க. பொரு­ளா­ளரும் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு  தனது கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *