திருச்செந்தூர் கோயில் ‘தரிசனத்துக்கு போவானேன்’ உடல் நலம் பாதிக்கப்பட்டு அழுவானேன்!

1 Min Read

திருச்செந்தூர், நவ.14- திருச்செந்தூர் கோவிலில் பொது தரிசன வரிசையில் காத்திருந்த பெண் பக்தருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவசரகால வழி திறக்கப்படாததால் வெளியேற முடியாமல் சுமார் 1 மணி நேரம் கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்செந்தூர் கோவில்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2 ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

நேற்றும் (13.11.2025) கோவிலில் வழக்கம்போல் பக்தர்க ளின் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார். 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பெண் கதறல்

அப்போது பொது தரிசன வரிசையில் காத்திருந்த பெண் பக்தர் ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் அவசர கால வழியில் உள்ள கதவு பூட்டப்பட்டிருந்ததால் அவர் வெளியே வர முடியாமல் தவித்தார். மேலும் அவசர கால வழியில் கோவில் பாதுகாவலர்கள் யாருமே இல்லை. இதனால் நேரம் செல்ல செல்ல அந்த பெண் பக்தர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். தன்னை இங்கிருந்து எப்படியாவது வெளியேற உதவுமாறு கூச்சலிட்டார். இதைக்கண்ட சக பக்தர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர்.

ஒரு மணி நேரம் தவிப்பு

சுமார் ஒரு மணி நேரம் அந்த பெண் பரிதவித்த நிலையில், இந்த காட்சியை வெளியே இருந்து பார்த்த பக்தர் ஒருவர் விரைந்து சென்று கோவில் பாதுகாவலர் ஒருவரை அழைத்து வந்தார். அதன்பிறகு அவசர கால வழியில் உள்ள கதவை பாதுகாவலர் திறந்து விட்டார்.

இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் பக்தர் தட்டுத்தடுமாறி வெளியேறினார். எனவே அவசரகால வழியில் உள்ள கதவுகள் பூட்டப்பட்டுள்ள இடத்தில் கோவில் பாதுகாவலர்களை பணியில் அமர்த்தவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *