பெரம்பூர் ஆசிரியர் ஆர்.ஜனார்த்தனன் மறைவு – கழகத் தோழர்கள் இறுதி மரியாதை

1 Min Read

கலிகி கல்விக் குழுமத் தலைவர், கணித மேதை ஆர்.ஜனார்த்தனன் நேற்று (12.11.2025) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

பெரம்பூர் இராவ்பகதூர் கலவல கண்ணன் (செட்டி) பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த இவர் – கல்வி நிறுவனங்கள் பலவற்றைத் தொடங்கி – பின்னர் அவற்றை ஒருங்கிணைத்து பெரும் கல்விக் குழுமமாக உருவாக்கியவர்.

திராவிட இயக்கத்தின்பால் பற்றுக்கொண்டவர். இயக்கக் கூட்டங்கள், இலக்கிய நிகழ்ச்சிகள் நடப்பதற்கு உதவிகள் புரிந்தவர்.

பேராசிரியர் வி.டெய்சி மணியம்மை, வடசென்னை மாவட்ட கழக காப்பாளர் கி.இராமலிங்கம், கழகப் பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், ‘பாசறை முரசு’ இதழின் ஆசிரியர் மு.பாலன், செம்பியம் கழக தலைவர் பா.கோபாலகிருஷ்ணன், கொளத்தூர் கழக அமைப்பாளர் ச.இராசேந்திரன்,  யாழ் நிழற்பட நிலையம் அ.சிவானந்தம் மற்றும் கழகத் தோழர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், எராளமான பொதுமக்கள் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். மாலை இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *