கடந்த 6 மாத காலத்தில் ரஷ்யா சென்ற இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரிப்பு

1 Min Read

மாஸ்கோ, நவ.13– நடப்பு 2025ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு சுற்றுலா சென்ற இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதன்படி, 2025 முதல் அரையாண்டில் 40,800 பயணிகள் இந்தியாவிலிருந்து மாஸ்கோவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். காமன்வெல்த் அமைப்பை (சிஅய்எஸ்) சாராத நாடுகளின் பயணிகள் மாஸ்கோவுக்கு சுற்றுலா செல்வதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக சிஅய்எஸ் நாடுகளுக்கு வெளியில் இருந்து 5 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் மாஸ்கோவுக்கு வருகை தந்துள்ளனர். இது, கடந்த 2024ஆம் ஆண்டை காட்டிலும் 10% அதிகம்.

ஆசிய நாடுகளில் இருந்து மாஸ்கோவுக்கு செல்லும் ஆர்வம் பலரிடம் அதிகரித்துள்ளது. அதன் விளைவாக, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

மாஸ்கோ உலகளவில் அனைவரையும் ஈர்க்கும் சுற்றுலாத்தலமாக விரிவடைந்து வருகிறது என்று மாஸ்கோ நகர சுற்றுலா குழு தெரிவித்துள்ளது. இ-விசா வசதி மற்றும் அங்கு நடைபெறும் கலாச்சார கொண்டாட்டங்கள் ஆகியவை உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *