திண்டுக்கல், நவ. 13- திண்டுக்கல் மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத்தலைவர் இரா.வீரபாண்டியன் தலைமை யில் 8.11.2025 அன்று காலை 11 மணிக்கு உற்சாகமாக நடை பெற்றது.
கழக மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் கொள்கைகள் உலக மயமாவதை விளக்கியும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அருந்தொண்டினையும், ஒவ்வொரு தோழரும், பெரியார் உலகத்திற்கு நன்கொடை திரட்டும் களப்பணியை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை விளக்கியும் தொடக்கவுரையாற்றினார்.
“இதுதான் ஆர்எஸ்எஸ் -பாஜக ஆட்சி, இது தான் திராவிடம் -திராவிட மாடல்ஆட்சி” என்ற தலைப்பில் தொடர் பரப்புரை மேற்கொண்டு 09.01.2026 அன்று திண்டுக்கல் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்து கூட்டத்தை சிறப்பாக நடத்துவது எனவும்,
டிசம்பர்-2இல் 93ஆம் அகவையில் தடம்பதிக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் மகிழ்வாக குருதிக்கொடை வழங்குவது, விடுதலைக்கு சந்தாக்கள் சேர்த்தளிப்பது எனவும்தீர்மானிக்கப்பட்டது
பெரியார் உலகமயம்-உலகம் பெரியார் மயம் ஆக்கிடும் பெரும்முயற்சியில் திருச்சி சிறுகனூரில் ரூ.100 கோடி செலவில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் நிதி திரட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்குவோம் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் உரையாற்றினார். மாவட்டத் துணைத்தலைவர் த.கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் பெ.கிருட்டிணமூர்த்தி, கழக தொழிலாளர்பேரவை செயலாளர் மு.நாகராசன், மாநகர தலைவர் அ.மாணிக்கம், மாநகர செயலாளர் தி.க.செல்வம், சுப்ரமணி, கே.கருணாநிதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.பாண்டியன், ஒன்றிய தலைவர் செபாஸ்டின் சின்னப்பர், பெருந்தகையாளர் முகைதீன், வத்தலகுண்டு சுந்தர் ஆகியோர் தீர்மானங்களை வழிமொழிந்து செயலாக்கவுரை வழங்கினார்கள்.
