தமிழர் தலைவரை நேரில் சந்தித்து, ‘‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’’ புத்தகத்தை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

1 Min Read

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75 ஆம் ஆண்டு விழாவையொட்டி “முத்தமிழறிஞர் பதிப்பகம்” வெளியிட்டுள்ள “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” புத்தகத்தினைத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (13.11.2025) பெரியார் திடலில் நேரில் சந்தித்து வழங்கினார். தி.மு.க. இளைஞரணியின் தொடர் செயல்பாடுகளையும், அறிவுத் திருவிழா உள்ளிட்ட முன்னெடுப்புகளையும் பாராட்டி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். உடன் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உள்ளார்
(சென்னை, பெரியார் திடல்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *