பெண் குழந்தைகள் பாதுகாப்பு முதிர்வுத் தொகை: சமூகநலத் துறையை அணுகலாம் – அமைச்சர் பெ.கீதாஜீவன் தகவல்

1 Min Read

தூத்துக்குடி, மே 11 – தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட முதிர்வு தொகைபெற சமூக நலத்துறையை அணுகலாம் என்று சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதாஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடிவருவாய் வட் டாட்சியர் அலுவலகம் சார்பில், தூத்துக்குடி சட்டமன்ற அலுவல கத்தில் மாற்றுத் திறனாளிகளுக் கான மாதாந்திர உதவித் தொகைக் கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார்.

அமைச்சர் பெ.கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங் கேற்று, 50 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 1,500 பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

பின்னர், அவர் செய்தியாளர் களிடம் பேசியதாவது, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத் தின் கீழ் 2 பெண் குழந்தைகள் உள்ளோர். அவர்களது 18 வயது பூர்த்திஅடைந்து, முதிர்வு தொகை பெறக்கூடியவர்கள், தங்களிட முள்ள பாண்டு பேப்பரின் நகலை சமூகநலத் துறை அலுவலகத்தில் நேரில் சென்று கொடுத்து, முதிர்வுத் தொகையைப் பெறலாம். இந்தத் திட்டத்தில் இது வரை ரூ- 231 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் பாலகுருசாமி, வட்டாட் சியர்கள் பிரபாசுரன், ராஜ லெட்சுமி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *