கருநாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் முடிவு

Viduthalai
1 Min Read

பெங்களூரு. மே 11- கருநாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தனியார் தொலைக்காட்சிகள் சில தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன. அதன்படி பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும் காங்கிரஸ் சராசரியாக 100-க்கும் மேற்பட்ட இடங்களிலும், பாஜக 100-க்கும் குறைவான இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. 

224 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனிப் பெரும்பான் மையுடன் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலானவை எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறும் என்று குறிப்பிடவில்லை. இருப்பினும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் காங்கிரசுக்கு  கூடுதல் இடம் கிடைக்கும் என்றே குறிப்பிட்டுள்ளன.  கருத்துக் கணிப்பு முடிவுகள் எப்படி இருந்தாலும் கருநாடக மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டனர். மே 13 ஆம் தேதி முடிவுகள் வெளியாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *