ஏழுமலையான் கோயிலில் நெய் விவகார மோசடி: திருப்பதி தேவஸ்தான முன்னாள் அதிகாரி தர்மா ரெட்டியிடம் விசாரணை

1 Min Read

திருப்பதி, நவ.12  ​திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில் ஜெகன்​மோகன் ரெட்​டி​யின் ஆட்​சிக் காலத்தில், ஒப்பந்தம் மூலம் கலப்பட நெய் வாங்​கிய​து தொடர்​பாக சிபிஅய் தலை​மையி​லான சிறப்பு விசா​ரணைக் குழு விசா​ரணை நடத்தி வரு​கிறது.

கலப்பட நெய்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள போலே​பாபா ஆர்​கானிக் டெய்ரி நிறு​வனத்​திற்கு ஒப்​புதல் கொடுக்​கப்பட்டு அவர்​கள் ரூ.250 கோடிக்கு 68 லட்​சம் கிலோ நெய்யை விநி​யோகம் செய்ய வேண்​டும். ஆனால், 2022 இல் இவர்​கள் விநி​யோகம் செய்த நெய் தரமற்​ற​தாக உள்​ள​தாக அப்​போதைய அறங்​காவல் குழு​வில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டு அவர்​களைத் தடுப்புப் பட்டியலில் (பிளாக் லிஸ்​டில்) வைத்​தா​லும், ஒரு லிட்​டர் பால் கூட தயாரிக்​காத இதே நிறு​வனம் தொடர்ந்து 2024 ஜூன் மாதம் வரை கலப்பட நெய்யை விநி​யோகம் செய்​துள்​ளது.

இது தொடர்பாக திண்​டுக்​கல் ஏஆர் டெய்ரி, திருப்​பதி வைஷ்ணவி டெய்ரி, உத்தரப்பிரதேசத்​தில் உள்ள மால் கங்கா டெய்ரி ஆகியோரிட​மும் சிறப்பு ஆய்வு குழு விசா​ரணை நடத்தி பலரை கைது செய்​துள்​ளது.

இந்​நிலை​யில், அந்தக் கால கட்​டத்​தில் நிர்​வாக அதி​காரி​யாக கோலோச்​சிய தர்​மாரெட்​டியை நேற்று (11.11.2025) சிறப்பு ஆய்வுக் குழு திருப்​ப​தி​யில் உள்ள அலு​வல​கத்​தில் வைத்து விசா​ரணை நடத்​தி​யது. நெய்​யின் தரத்தை எவ்​வாறு ஆய்வு செய்​தீர்​கள்? போலே​பாபா டெய்ரி நிறு​வனத்தை பிளாக் லிஸ்​டில் வைத்த பின்​னரும் எப்​படி அவர்​கள் மூல​மாகவே நெய் விநி​யோகம் ஆனது? பக்​தர்​கள் தொடர்ந்து லட்டு பிர​சாதம் குறித்து குற்​றச்​சாட்​டு​களை முன் வைத்​தும் ஏன் அவற்​றின் மீது நடவடிக்கை எடுக்​க​வில்​லை? என்​பது போன்ற பல கேள்வி​கள் தர்மா ரெட்​டி​யிடம் கேட்​கப்​பட்​ட​தாக தெரி​கிறது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *