தற்போது நடந்துள்ள குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் யாரிடம் விளக்கம் கேட்கும்?

மத்தியில் ஆட்சி, டில்லியிலும் பிஜேபி ஆட்சி, காவல்துறை முழுக்க உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது.

மொத்த நிலப் பரப்பிலும், மக்கள் தொகைக் கணக்கீட்டிலும் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், மிகக் குறைவாக உள்ள டில்லியில் தான் அதிகளவு காவல்துறையினர் பணியாற்றுகின்றனர்.

பத்தாததற்கு, IB,RAW,NIAவும் டில்லியின் பாதுகாப்பை கண்காணிக்கிறது.

டில்லியில் மொத்தம் 182 காவல் நிலையங்கள் உள்ளன. அதில் 19 சிறப்புப் பிரிவு செயல்படுகிறது. ஒரு காவல் நிலையத்தில் குறைந்த பட்சம் 400 காவல்துறையினர் பணியாற்றுகின்றனர்..

டில்லியில் அனுமதிக்கப்பட்ட காவல்துறையினரின்  எண்ணிக்கை-94,249 பணியாற்றும் காவல்துறையின் எண்ணிக்கை -79,817.

டில்லி காவல் துறை (@DelhiPolice)-ல் காலியாகவுள்ள பணியிடங்கள் -14,432.

இந்தியாவில் வேறு எந்த மாநில காவல் துறையினருக்கும் இல்லாத அதிகாரத்தை டில்லி காவல்துறைக்கு வழங்கியுள்ளது ஒன்றிய அரசு

உண்மையில் ஒன்றிய அரசு காலிப் பணியிடங்களை நிரப்பாமல் தலைநகரின் பாதுகாப்பை கோட்டை விட்டுள்ளது.

என்ன சந்தேகம் என்றால் தற்போது நடந்துள்ள குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் யாரிடம் விளக்கம் கேட்கும்?

– கோ. கருணாநிதி

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *