30 கிராம மக்கள் பயன் பெறுவார்கள் சிவகாசி, சிறீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்துக்கு இடையே ரூ.61 கோடியில் மேம்பாலம்! முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

விருதுநகர், நவ.12- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி நகரமானது பட்டாசு மற்றும் அச்சுத் தொழிலுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. ‘குட்டி ஜப்பான்’ என்றும் இந்நகரம் அழைக்கப்படுகிறது. சிவகாசி நகரிலிருந்து சிறீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள சாட்சியாபுரத்தில் அமைந்திருக்கும் இரயில்வே கேட் ஒவ்வொரு முறையும் மூடப்படும்போது, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்ததோடு, பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களும், அவசரமாக மருத்துவமனை செல்லும் மக்களும் நீண்டநேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

ரூ.61 கோடியில் மேம்பாலம்

இதனைக் கருத்தில் கொண்டு, இம்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்றும், அவர்களது சிரமத்தை போக்குவதற்காகவும், சிவகாசி மற்றும் சிறீவில்லிபுத்தூர் இரயில்வே நிலையங்களுக்கு இடையே சாட்சியாபுரத்தில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவிற்கிணங்க, சிறீவில்லிபுத்தூர் – சிவகாசி –- விருதுநகர் -– அருப்புக்கோட்டை –- திருச்சுழி -– நரிக்குடி -– பார்த்திபனூர் சாலையில் இரயில்வே கேட் எண். 427க்கு மாற்றாக சிறீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி இரயில் நிலையங்களுக்கிடையே சாட்சியாபுரத்தில் 61 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு, அதை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (11-11-2025) திறந்து வைத்தார்.

தியாகி சங்கரலிங்கனார் பெயர்

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார் விடுதலைப் போராட்ட வீரரும், மதராசு மாநிலம் என்று அழைக்கப் பட்ட மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்காக, தனது வீட்டின் முன்பு 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர் துறந்தவரும் ஆவார். அன்னாரது தியாகத்தைப் போற்றும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று புதிதாகத் திறந்து வைத்த மேம்பாலத்திற்கு “தியாகி சங்கரலிங்கனார் மேம்பாலம்” எனவும் பெயர் சூட்டினார்.

இந்த மேம்பாலத்தினால் சிவகாசியைச் சுற்றியுள்ள சாட்சியாபுரம், ஆனையூர், தேவர்குளம், திருத்தங்கல் உள்ளிட்ட 30 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 இலட்சம் மக்கள் பயன் அடைவார்கள். மேலும், இம்மாவட்ட மக்களின் முப்பது ஆண்டு கால கனவு தமிழ்நாடு முதலமைச்சரால் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *