கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 11.11.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*   அ.தி.மு.க. எஸ்.அய்.ஆர் விவகாரத்தில் போலி நாடகம் நடிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு; பாஜக – அ.தி.மு.க. கூட்டணி மக்களின் வாக்குரிமையை திருட திட்டமிடுவதாக பேச்சு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

*   எஸ்.அய்.ஆர். என்ற வோட் பந்தி நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும் என மம்தா வலியுறுத்தல்.

*   தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி திமுகவுக்கு எதிராக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் புகார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*   “ஆர்எஸ்எஸ் பதிவு செய்யாதது வரி விலக்கு பெறவே. தாங்கள் சட்டத்தின் மேலாக, அரசியலமைப்பின் மேலாக இருக்க விரும்புகிறார்கள்.” என கருநாடக அமைச்சர் பிரியங்க் கார்கே பதிலடி.

தி இந்து:

*   “உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுத்தது சமாஜ்வாதி கட்சி தான். இப்போது எங்களின் இலக்கு 2027இல் ஒரு சமூகவாத அரசு அமைப்பதாகும். ஜனநாயகத்தை காப்பாற்ற 2027 தேர்தல் தீர்மானகரமானதாக இருக்கும்,” என்று லக்னோவில் செய்தியாளர் சந்திப்பில் அகிலேஷ் தெரிவித்தார்.

*   “பீகார் தேர்தலின் முதல் கட்டம் முடிந்து நான்கு நாட்களாகியும், தேர்தல் ஆணையம் இன்னும் ஆண்கள் மற்றும் பெண்கள் வாக்காளர்களின் விபரத்தையோ, அவர்களின் வாக்கு சதவீதத் தையோ மக்களுக்கு வெளியிடவில்லை,” என தேர்தல் ஆணையம் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு.

தி டெலிகிராப்:

*   பீகார் தேர்தலில் பிரியங்கா மற்றும் ராகுல் காந்திக்கு பெரிய கூட்டங்கள் திரண்டது. மேலும் மக்கள் கவனம் வேலைவாய்ப்பு மற்றும் ஊழல் பிரச்சனைகளில் அதிகம் உள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா:

*   உ.பி.யில் வி.எச்.பி.யின் அடாவடி: மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரை மிரட்டி, தண்டனை குறைப்பு: “மோசடி, மிரட்டல், வசூல்” குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் மண்டலப் பொறுப்பாளர் பிரின்ஸ் கவுருக்கு எதிரான கடுமையான பிரிவுகள் எஃப்அய்ஆரில் நீக்கப்பட்டன.

 

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *