தனிநபர்களும் சட்டப்படி குழந்தையை தத்தெடுக்க முடியும் உச்சநீதிமன்றம் கருத்து

1 Min Read

புதுடில்லி,மே12- தனிநபர்கூட குழந் தையை தத்தெடுத்துக் கொள்ள சட்டம் அனுமதிக்கிறது என தன்பாலின திரு மணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரும் மனுவை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தன்பாலின திருமணத்துக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் வழங்க உத்தர விடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல் வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட் டுள்ளன. இந்த மனுக் கள் மீது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த மனுக்கள் மீது 9ஆவது நாளாக   10.5.2023 அன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, குழந்தைகள் உரிமை பாதுகாப்புக் கான தேசிய ஆணையம் (என்சிபிசிஆர்) சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அய்ஷ் வர்யா பாட்டி வாதிடும் போது, “ஆண்-பெண் (வெவ் வேறு பாலின) தம் பதிக்கு இயற்கையாக பிறந்த குழந்தைகள் நலனை பாது காக்கும் வகையில் நமது சட்டங்கள் வடிவமைக்கப்பட் டுள்ளன.

இது வெவ்வேறு பாலின தம் பதியையும் தன்பாலின தம்பதி யையும் சமமாக கருத முடியாது என்பதை உணர்த்துவதாக உள்ளது. குழந்தை களின் நலனே முதன்மை யானது என நமது சட்டத்தின் பல்வேறு நிலைகளில் கூறப்பட்டுள்ளது. மேலும் குழந் தையை தத்தெடுப்பது ஒருவரின் அடிப் படை உரிமை அல்ல என பல்வேறு தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளது” என்றார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறும்போது, “தனி நபர்கூட குழந்தையை தத்தெ டுக்க நமது சட்டம் அனுமதி அளிக் கிறது. ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தன்பாலின ஈர்ப்பா ளராக இருந்தால் கூட குழந்தையை தத்தெடுக்கலாம்.

குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி உடையவர்கூட குழந்தையை தத்தெ டுக்க லாம். குழந்தை பெற தகுதி உள்ளவர்கள் குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாய மல்ல” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *